பல்லவி
ஸீதா வர ஸங்கீ3த ஞானமு
தா4த 1வ்ராயவலெரா
அனுபல்லவி
கீ3தாத்3யகி2லோபநிஷத்-ஸார 2பூ4த
ஜீவன்முக்துட3கு3டகு (ஸீ)
சரணம்
3ஆகாஸ1 ஸ1ரீரமு ப்3ரஹ்மமனே
4ஆத்மா ராமுனி தா 5ஸரி ஜூசுசு
லோகாது3லு சின்மயமனு ஸுஸ்வர
லோலுடௌ3 த்யாக3ராஜ ஸன்னுத (ஸீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ வர/ ஸங்கீ3த/ ஞானமு/
சீதை/ மணாளா/ இசை/ அறிவு/
தா4த/ வ்ராயவலெரா/
தாதை/ எழுதவேண்டுமய்யா/
அனுபல்லவி
கீ3தா/-ஆதி3/-அகி2ல/-உபநிஷத்/-ஸார/ பூ4த/
கீதை/ முதலாக/ அனைத்து/ உபநிடத/ சாரமாகிய/ பூத/
ஜீவன்/-முக்துடு3/-அகு3டகு/ (ஸீ)
சீவன்/ முத்தன்/ ஆகுதற்கு/ சீதை...
சரணம்
ஆகாஸ1/ ஸ1ரீரமு/ ப்3ரஹ்மமு/-அனே/
(வெட்ட) வெளி/ மெய்/ பிரமம்/ எனும்/
ஆத்மா/ ராமுனி/ தா/ ஸரி/ ஜூசுசு/
ஆன்மா/ ராமனை/ தான்/ சரி/ கண்டுகொண்டு/
லோக-ஆது3லு/ சின்மயமு/-அனு/ ஸுஸ்வர/
உலகங்கள்/ சின்மயம்/ எனும்/ இனிய சுரங்களில்/
லோலுடௌ3/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஸீ)
திளைக்கும்/ தியாகராசனால்/ சிறக்கப் போற்றப் பெற்ற/ சீதை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வ்ராயவலெரா - வ்ராயவலெரா ராம.
Top
மேற்கோள்கள்
2 - பூ4த ஜீவன்முக்துட3கு3டகு - பூத சீவன் முத்தன் - உடலுடன் இருக்கையில் முத்தி பெறுதல் - 'பூ4த ஜீவன்' என்ற சொல்லுக்கு, கீதையில் (15-வது அத்தியாயம், 7-வது செய்யுளில்) கண்ணன் உரைத்த விளக்கத்தினை நோக்கவும் -
"என்னுடையதோர் பகுதி, உயிரினங்களில், அழிவற்ற சீவனாகி,
மனம் முதலான ஆறு புலன்களை, தன்னுள் ஈர்த்துக்கொண்டு, பிரகிருதியில் (இயற்கை) உறைகின்றது."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
தியாகராஜர், தமது 'மோக்ஷமு க3லதா3' என்ற கீர்த்தனையில் 'பக்தியுடன் கூடிய, இசையறிவுடைத்தோர்கள், சீவன் முத்தராகி, வீடு பெறுகின்றனர்' என்று கூறுகின்றார். அதாவது, அப்படிப்பட்ட இசையறிவற்றோர், சீவன் முத்தராகாததனால், வீடு பெறுவதில்லை, என்று பொருளாகும்.
தியாகராஜர், 'நாதோபாஸனை' எனப்படும் இசைவழிபாட்டினைப் பற்றி மட்டுமே கூறியுள்ளார். சீவன் முத்தராவதற்கு, கீதையில், கண்ணன் கூறிய, 'கரும', 'ஞான', 'பக்தி' மற்றும் 'ராஜ' யோக முறைகளைப் பற்றி விமரிசிக்கவில்லை.
ஆதி சங்கரர் இயற்றிய 'ஜீவன்-முக்தானந்த லஹரி' நோக்கவும்.
Top
விளக்கம்
1 - வ்ராயவலெரா - பிறந்த குழந்தையின் தலையில், மண்டையோடுகள் சேரும் இடத்தில், தோல் மடிப்புகள், நெளிந்த கோடுகளாகக் காணப்படும். இந்த கோடுகள், தெலுங்கில் 'தல வ்ராத' என்றும், தமிழில் 'தலையெழுத்து' என்றும் வழங்கும். இந்த கோடுகள், ஒருவனுடைய விதியினைக் குறிப்பதாகக் கருதப்படும். நெற்றியிலுள்ள கோடுகளும், அங்ஙனமே விதியினைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
3 - ஆகாஸ1 ஸ1ரீரமு ப்3ரஹ்மமு - லோகாது3லு சின்மயமு - வெட்டவெளியே பிரமத்தின் மெய்யாக - உலகங்கள் சின்மயமாக. இதுபற்றி தியாகராஜர் மற்ற கீர்த்தனைகளில் கூறியுள்ளவை -